
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பர்ஷிஸ் ஹட்ஷேனன் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.