பெண்களை தொடர்ச்சியாக கற்பழித்து வந்த மர்ம நபர்

310
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெண்களை பின் தொடர்ந்து தொடர்ச்சியாக கற்பழித்து வந்த மர்ம நபர் ஒருவரை பொலிசார் நூதன திட்டம் வகுத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.கிழக்கு பாரீஸில் உள்ள Jourdain என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெண்களை குறிவைத்து இந்த மர்ம நபர் செயல்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 4ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் பெண் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

இவரை மர்ம நபர் ஒருவரும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். 30 வயதான அந்த பெண் வீட்டை திறந்து உள்ளே நுழைந்த அதே சமயம் பின்னால் வந்த நபர் அவர் மீது பாய்ந்து வீட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

மர்ம நபர் உள்ளே நுழைந்ததை கண்டு அந்த பெண் அலறி துடித்துள்ளார். ஆனால், மர்ம நபர் அவரை கதற கதற கற்பழித்துள்ளான்.

பெண்ணின் அலறல் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த கதவை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், வந்த வேலை முடிந்ததால், அந்த நபர் வீட்டின் பின் வழியாக தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த 24 மணி நேரத்திற்கு பிறகு, இதே Jourdain ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு பெண் இரவு 1.30 மணியளவில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணையும் அதே மர்ம நபர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். வீட்டிற்கு அருகில் வந்ததும், மேல் தளத்திற்கு செல்ல ‘லிஃப்ட்டில்’ ஏறி சென்றுள்ளார்.

பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம நபர் பெண்ணை லிஃப்ட்டிலேயே மடக்கி கற்பழித்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் பொலிசார் ஆராய்ந்தபோது, பெண்களை ரயில் நிலையத்திலிருந்து தான் அந்த மர்ம நபர் பின் தொடர்ந்துள்ளது தெரியவந்தது.

உடனே அந்த பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டன. அங்கு வரும் ஒவ்வொரு ஆண் மகனையும் கூர்ந்து கவனித்தனர்.

அப்போது, பெண் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். அவரை அதே மர்ம நபர் பின் தொடர்ந்துள்ளார்.

நபரின் நடத்தியில் சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை பின் தொடர்ந்தனர். சில நிமிடங்களில் அவர் குற்றவாளிதான் என உறுதி செய்த பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், ‘இரண்டு பெண்கள் மட்டுமே புகார்கள் தெரிவித்திருந்தாலும், இந்த நபரால் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டுருக்க வாய்ப்பு இருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர்.

பெண்களை தொடர்ச்சியாக கற்பழித்து வந்த அந்த நபருக்கு தங்குமிடம் இல்லாததால், ரயில் நிலையத்திலேயே தங்கி இந்த குற்றங்களை செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

635390843440183403Fotolia_59998455_XS

SHARE