வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்திற்குள் தொலைபேசி பாவனைக்குத் தடை

245

வெலிகடைச்  சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

6c5a1905-c653-49f0-93e4-464923bd32611

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், ஆட் கடத்தல்கள் மற்றும் கொள்ளை போன்ற பல குற்றங்கள் சிறைச்சாலைகளுக்குள் உள்ள கைதிகளாலேயே வழிப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சில கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலையைச் சூழவுள்ள பகுதிகளில் கைபேசிப் பாவனைகளைக் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்த போதிலும் அது வெற்றியளிக்காமையால் பிறிதொரு நடவடிக்கையை மேற்கொள்ள, அந்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE