மின்சார தடை குறித்து மின்வலு அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம் அளிக்க உள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி பாராளுமன்றில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்சார தடை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் அடிப்படையில் மின்சாரத் தடைக்கான காரணம் பற்றி அறிவிக்கப்பட உள்ளது என அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.