சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளதாகவும், அதனை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகனத்தை பழுதுபார்த்து கொடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், ஜனாதிபதியின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் வாகனத்தை பழுதுபார்க்க ஆர்வம் காட்டவில்லை.
போரை வென்றெடுத்த எனக்கு குண்டு துளைக்காத வாகனத்தை பழுது பார்த்துக்கொடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலைமை வருத்தமளிக்கின்றது.
எனது உத்தியோகபூர்வ இல்லம் இன்னமும் புனரமைக்கப்படவில்லை. இன்னும் எவ்வளவு காலம் வரையிலும் உத்தியோகபூர்வ இல்லத்திற்காக காத்திருக்க நேரிடுமோ தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.