இந்தியாவில் அகதி முகாமில் தங்கியிருக்கும் இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. 31 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
மனவேதனையால் நபர் கூறிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமத்தித்துள்ளனர்.
குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.