
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
வெடிபொருட்களை கண்டு பிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றி வளைப்பிற்கு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகள் வரையில் அடையாளம் காண வேண்டுமென கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை அங்கி உள்ளிட்டவற்றை கண்டு பிடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்தால் பொலிஸாருக்கு உளவுத் தகவல்கள் சுபலமாக கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.