ஈழத்தமிழர்கள் கலைத்துறையில் பலரும் தற்போது சாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் மிக உயரிய விருதை வென்ற கமல்ஹாசனிடம் ஈழத்தமிழகர்கள் எப்படிப்பட்ட ஒரு படத்தை எடுக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு அவர் ‘நிஜ சரித்திரம் என்பது வெற்றியாளர் சொல்வது மட்டுமில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும். யாருக்கும் அஞ்சாமல், ஒருபுறம் சாயமல், அரசியல் சூழ்ச்சியில் சிக்காமல் ஒரு உண்மையான படைப்பை எடுக்க வேண்டும்.
அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்குகள், நாளை உண்மையான சரித்திரத்தை நீங்கள் தான் சொல்ல முடியும்’ என கூறியுள்ளார்.