வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

286
இனந்தெரியாதவர்களினால் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் சம்பவமொன்று, நேற்று அதிகாலை மூன்றரை மணிக்கு, பதுளை புறநகர்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

பதுளைப் பகுதியின் வெலிக்கேமுள்ள என்ற இடத்தின் 39ஏ என்ற இலக்கத்தையுடைய வீடொன்றே இவ்வாறு கைக்குண்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

கடந்த பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்ற பதுளை எரிபொருள் நிலைய முகாமையாளரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மூவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், மற்றைய இருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி அவர்களின் வீட்டிற்கே, கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சந்தேகநபர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE