துபாயில் தங்க நகைகளை திருடியதாக இலங்கைப் பணிப்பெண் மீது முறைப்பாடு

430

28056607-bijoux-or-colliers-bagues-bracelets-montre-richesse

துபாயில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர், தங்க நகைகளை திருடிய பின்னர், இலங்கைக்கு சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துபாயின் பொதுமகன் ஒருவர் இந்த முறைப்பாட்டை துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி தாம் வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த போது குறித்த இலங்கை பணிப்பெண், தமது 40 ஆயிரம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பணிப்பெண் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டமையை தமது மகன் தமக்கு அறியத் தந்ததாகவும் துபாயின் பொதுமகன் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

SHARE