சிறுதானிய வகைகளில் முதலிடம் வகிக்கும் கம்பு, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
மேலும் வயிற்று புண், மலச்சிக்கலை தடுக்கிறது.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1 கப்
சாதம் ஊற வைத்த தண்ணீர்- தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 1
மோர் -1 கப்
சாதம்- 1 கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் சாதம் ஊற வைத்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக கம்பு மாவை போட்டு சுமார் 8 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்புடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
நன்கு களி போன்று வந்தவுடன் வேறொரு பாத்திரத்தை மாற்றிவிட வேண்டும்.
ஆறியவுடன் இதில்சாதம், மோர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தால் சுவையான கம்புகூழ் ரெடி!!!