மே தின விசேட பாதுகாப்புக் கடமைக்காக கொழும்புக்கு வருகை தந்த வெளிப் பிரதேச பொலிஸ் அதிகாரிகளுக்கு உணவோ ஒரு சொட்டு நீரோ வழங்கப்பட வில்லையென விசனம் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, பதுளை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த விசேட பாதுகாப்புக் கடமைக்காக வருகை தந்த இவர்கள் நேற்றுக் காலை 8.00 மணிமுதல் 3.00 மணி வரையில் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இதன்போது உண்ணவோ, குடிக்கவோ எதுவும் வழங்கப்படவில்லையென கவலை வெளியிட்டுள்ளனர்.