மடகஸ்கார் மற்றும் கோமோரோஸ் ஆகிய நாடுகளில் கடற்படை, கடலோர பாதுகாப்பு

297

 

மடகஸ்கார் மற்றும் கோமோரோஸ் ஆகிய நாடுகளில் கடற்படை, கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி வருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

திருகோணமலை மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

28-1446009101-india-sri-lanka-begin-joint-naval-exercise2-600

கிழக்கு ஆபிரிக்க நாடுகளை சூழ உள்ள கடற்பரப்பில் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கடற் கொள்ளைகளை தடுக்கும் நோக்கில் இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE