நீதிபதி இளஞ்செழியனை வெளியேற்றுவது உறுதி ரெலொ சபதம்….??

268

 

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இடம் மாற்றி வடக்கு மாகாணத்தை சீரழிக்க நினைக்கும் யார் இந்த சிறிகாந்தா?

1990 களில் சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் கொழும்பில் 5, 10 ரூபாவிற்கு சட்டம் பேசி வாழ்ந்த ஒரு சட்டத்தரணி. ஒரு நாள் கூட சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகளுக்காக வாதாடத ஒரு சுயநலவாதி.

86 லிருந்து 2002 வரை இந்திய ராணுவம், சிறிலங்கா இராணுவப் பாதுகாப்புடன் ,அதிரடிப படையின்; பாதுகாப்புடன் இருந்து கொண்டு தமிழீழப் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகப் போராடிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்.

போராளிகளால் ‘’தேசத் துரோகி ’’ எனப் பட்டச் சூட்டப்பட்டவர். அவர்கள் இல்லாத இக்காலப்பகுதியில் தியாகி, தமிழ்தேசியவாதி ஆக உலாவிவரும் இவர் மனித நாகரிகத்திற்கு எதிராகவும் தள்ளாடும் 75 வயதிலும் 30 வயதையடையாத பெண்ணுடன் குடும்பம் நடாத்தும் பண்பாட்டுக் காவலன்.

2005 – 2009 காலப்பகுதியில் யாழ் மண்ணில் கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய கொள்ளைச் சம்பவங்களுக்கு காரணமாக இருந்தவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய காக்கும் கடவுள்.

கணவன் முன்னிலையில் மனைவியின் கழுத்திலிருந்த தாலிக் கொடியை அறுத்த கயவர்களை, தந்தை முன் மகளைக் கற்பழித்க அத்தந்தை உயிர் பிரிய காரணமாக இருந்த காடையர்களை காத்த பெருமான்.

இது மட்டுமா 40 வருட காலப் போரட்ட அர்பணிப்புத் தியாகங்களை கொச்சப்படுத்தும் வகையில் யாழில் இன்று அரங்கேறிக்கொண்டிருக்கும் மனித ரத்தத்தை உறைய வைக்கும் வாள்வெட்டுச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள், ரவுடித்தனங்கள் கற்பழிப்புகள், கஞ்சா போதைப் பொருள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் காடையர்கள், தேசத்துரோகிகள், ரவுடிகள், சமூகத்துரோகிகள் போன்றோருக்கு நண்பனாக இருந்து.

அவர்களுக்காக நீதி மன்றில் பொய்பேசி வாதாடி அவர்கள் செயல்களை நியாயப்படுத்தி பிணையில் விடுத்தோ, விடுதலை செய்வித்தோ மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களை செய்யத்தூண்டி சமூக அமைதியின்மை, பண்பாட்டுச்சீரழிவு போன்றவற்றை ஏற்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக செயற்படும் ஒரு துரோகி.

இன்று கஞ்சா போன்ற போதை பொருள் பழக்கத்தை யாழ்குடாநாட்டு இளைஞர்,மாணவர்களிடையே ஏற்படுத்துவதில் முழுகாரணமாக இருப்பவர் இவரே.

இன்று யாழ்குடாநாட்டில் உள்ள நீதிமனறங்களில் கஞ்சா வியாபாரிககளுக்காக ஆதரவாக ஆஜராகி அவர்களை காப்பாற்றத்துடிக்கும் ஒரு சட்டத்தரணி.

குடாநாட்டு இளைஞர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை போதைகளுக்கு அடிமையாக்கி எதிர்காலத்தில் எம் உரிமை, பண்பாடு, கலாச்சாரம் பற்றி சிந்திக்காத சமுதாயமாக உருவாக்கத் துடிக்கும் நல் சிந்தனையாளர்.

இன்று சமூகத்தைபற்றி அதன் பாதுகாப்பு பற்றி கவலைகொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையைத்தான்’’ நினைவு படுத்துகின்றது. ஒரு காலகட்டத்தில் இராணுவத்தினர், அதிரடிப்படையினருடன் சேர்ந்து எம்மினத்தையே அழித்த சி.காந்தா இன்று அதிரடிப்படையின் செயற்பாட்டை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

ஒரு பக்கம் சமூகவிரோதிகளைக் காப்பாற்றிக்கொண்டு இன்னொருபக்கம் சமூகத்தைப்பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன அருகதை இருக்கிறது.

மேல்நீதிமன்ற நீதிபதியின் வருகையால் அவருக்கு இச்சமூகத்தின் மேல் உள்ள தனிப்பட்ட அக்கறையின் காரணமாக நீதிபதியின் செயற்பாட்டால் இன்று குடாநாட்டில் குற்றச் செயல்கள் பெருமளவை கட்டுப்படுத்திய காரணத்தால் தன் உழைப்பை இழந்து கையேந்தும் நிலை ஏற்பட்டு தன்பிழைப்புக்காக நீதிபதியை இடமாற்றம் செய்து அதன் மூலம் தன் உழைப்பை உறுதி செய்ய சமூகச் சீரழிவை மீண்டும் ஏற்படுத்த நினைக்கும் சிறிக்காந்தாவின் சமூக விரோத செயலை கண்டிக்க எல்லோரும் முன்வரவேண்டும்.

தேவை ஏற்படின் இவர் ஆஜராகி வாதாடிய கஞ்சாவிற்பனை,கொள்ளை வாள்வெட்டு தொடர்பான வழக்கு விபரங்களை ஆதாரத்துடன் தெரிவிக்கத் தயாராகவுள்ளோம்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் ரெலொவின் உறுப்பினர் கென்றி ஆகியவர்கள் கலந்து கொண்டதன் மூலம் நீதிபதி இளஞ்செழியனை வெளியேற்றுவது ரெலொ கட்சியின் முழுமையான நிலைப்பாடு என உறுதிப்படுத்தியுள்ளது.

உயர் நீதி மன்ற நீதிபதியை ஆயுதக் குழு விமர்சிப்பதைப் பார்த்து நீதிபதி இளஞ்செழியன் சும்மா இருப்பது வேதனையாக உள்ளது.

காரணம் யாழ் குடா நாட்டின் அமைதியை விரும்பாத இக் கட்சி மீது தகுந்த நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது அவர்களை கண்டு கொள்ள மாட்டீர்களா அம்பாறையில் இருந்து கென்றி மகேந்திரன் சி.காந்தாவின் யாழ் ஊடகவியலாளர் மகாநாட்டிற்கு வருகிறார் என்றால் நீதிபதி இளஞ்செழியனை வெளியேற்றுவதில் ரெலொவின் உறுதிப் பாடு எப்படி உள்ளது. அரசின் முக்கியஸ்தர்களிக் உதவியை நாடியுள்ளனர் அக் கட்சியினர் அதற்கு பிரதி உபகாரமாக வரும் தேர்தலில் அக் கட்சி யானைக் கட்சியின் பிரமுவர்களை சில மாவட்டங்களில் களம் இறக்கத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

கென்றி யார் விந்தன் யார் விரிவாக அடுத்த பகுதியில்…..

விமர்சனங்கள் வரவேற்கத் தக்கது அதற்காக கயவர்களைக் காப்பாற்றுவதற்காக நீதிமான்கள் மீது விரல் நீட்டுவது தகுமா

இன்று ஆளுனரை விமர்சிக்க ஊடகவியலாள ர்களை அழைத்த ரெலொ நீதிபதி இளஞ்செழியனிற்கு எதிராக கதைக்கும் களமாக அதன் பொதுச் செயலாளர் செயற்பட்டமை அக்கட்சியின் பழைய குணம் திரும்புகிறதா எனக் கூறப்படுகிறது….

ரெலொ இன்று வரை மௌனமாக இருப்பது இவை அனைத்திற்கும் ஆதாரம்.

முக நுால் விமர்சனம்…..
telotelo01

 

 

SHARE