சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாங்குளம் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.