தலாவ – தம்புத்தேகம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
எனினும், நேற்று இரவு முதல் வட பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத் கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலாவ பிரதேசத்தில் இன்றும் வெள்ள நிலைமை காணப்படுகின்ற அதேவேளை, புகையிரத பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் குறித்த புகையிரத மார்க்கத்தை சீர்செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களின் வேகமானது மணிக்கு பத்து கிலோ மீற்றராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த புகையிரத மார்க்கமானது சீர்செய்தமையைத் தொடர்ந்து நேற்று இரவு தபால் ரயில் சேவையானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.