ஆபத்தில் பொதுமக்கள்… மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது

304

arme01

வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிகமானவர்கள் வௌ்ளத்தில் சிக்கியுள்ளமை தொடர்பில் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்புடன் மீட்பதற்காக போதுமானளவு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல் காணப்படுமானால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112 670 002 அல்லது 011 2136136 என்ற இலக்ககங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.armearme01arme02arme03arme04arme05arme06arme07arme08arme09

 

SHARE