உங்களுக்குத் தெரியுமா?.. குழந்தைகள் அதிகம் பெற்றால் இளமை நீடிக்குமாம்!..

307

கனடாவிலுள்ள சைமன் ஃப்ராசர் என்ற பல்கலைக் கழகம் கௌட்டி மாலாவில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய பதிமூன்று வருட ஆய்வில் நிறைய குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு முதுமை எளிதில் அடவதில்லை எனவும், அவர்கள் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் சுமார் எழுபத்தைந்து தாய்மார்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கன்னத்தின் உட்புறத்திலிருந்து சிறிய சதைப் பகுதியையும், எச்சிலையும் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். பதிமூன்று வருடங்களில் இரண்டு முறை ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் இளமையின் ரகசியம் வெளிவந்துள்ளது.

குழந்தைகள் அதிகமாக பெற்றிருக்கும் தாய்மார்களை சுற்றி சமூகமும், உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் ஆதரவும் இணைந்து அவர்களுக்கு பலத்தை தருகிறது. அவர்களின் ஆதரவும் ஒரு வகையில் அவர்களை இளமையாக வைத்திருக்கிறது என்கிறார்கள்.

இது அந்தகாலத்தில் பொருந்தும். அந்த காலத்தில் பெரும்பாலான தாய்மார்கள் இளமையாக இருந்ததாக கேள்விப்படுவதுண்டு. இதற்கு காரணம் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.

ஆகவே தாய்மார்களின் டெலோமோமியர் அளவினை கணக்கிட்டும், ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டும், சமூக அமைப்பில் உண்டாகும் இணைப்பும் சேர்ந்துதான், அதிக குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் இளமையாக இருப்பதற்கான காரணம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியை இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். எனவே மேலும் பல புதிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

SHARE