பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு, செதில் படிந்து காணப்படும். இதனால் முக்கு மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். இந்த பிரச்னையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்…
மிதமான சுடு நீரில் முகத்தை கழுவவும்
குளிர்காலத்தில் மிதமான சூடுள்ள தண்ணீரில் குளிப்பது சுகமே. இருப்பினும் அடிக்கடி உங்கள் முகம் மற்றும் கைகளை மிதமான சுடு நீரில் கழுவும் போது தோல் உரிவதும், உங்கள் சருமத்தின் எண்ணெய்ப்பசை நீங்குவதும் தடுக்கப்படுகிறது.
மாய்ஸ்ட்ரைசர்
இரவு உறங்கும்முன் கை, கால்களில் மாய்ஸ்ட்ரைசர் தடவி உறங்கவும். இதனால் மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
நல்ல தரமான மாய்ஸ்ட்ரைசரை உபயோகிக்கவும்
ஒரு சில மாய்ஸ்ட்ரைசர்களில் இருக்கும் பெட்ரோலிய அடிப்படையிலான பொருட்கள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். நீர் அடிப்படையிலான மாய்ஸ்ட்ரைசருக்கு பதிலாக எண்ணெய் வகையிலான மாய்ஸ்ட்ரைசரை உபயோகிக்கவும்.
தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்
பனிக்காலத்தில் நமக்கு தாகம் எடுக்காது. ஆனாலும் நமது தோலுக்கு நீர்சத்து தேவைப்படும். எனவே மிதமான நீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
சன் ஸ்கிரீன்
கோடைகால வெயில் மட்டுமல்ல, குளிர்கால வெயிலும் சருமத்தை பாதிக்கும். இதற்கு ஜின்க் அடிப்படையிலான அல்லது டைட்டானியம் அடிப்படையிலான சன் ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக்
வீட்டிலேயே சில ஃபேஸ் பேக்குகளை தயாரிக்கலாம். தேன் , வெண்ணெய், தயிர் , ஆலிவ் மற்றும் ஜோஜோபா எண்ணெய், பாதாம் எண்ணெய், வாழைப்பழங்கள் மற்றும் கற்றாழை இவற்றில் உங்களுக்கு பிடித்தவற்றை ஒரு பேஸ்ட் போல கலந்து முகத்தில் பூசி 10-30 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும்.