சமையலறையில் உள்ள கடுகு, மஞ்சள், குங்குமப்பூவில் தொடங்கி, பெருங்காயம் வரை அவற்றின் மருத்துவ குணங்கள் ஆரோக்கியம் தருகின்றன.

மஞ்சள்
மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, ஜலதோஷம், வாய்வு, இருமல், என நிறைய வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதோடு, சருமத்தில் ஏற்படும் தொற்று, புண், படை, சரும அலர்ஜி என நிறைய சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது

மிளகு
மிளகு காரமான மசாலா பொருள். இது உஷ்ணத்தை கொடுக்கக் கூடியது. கிருமி நாசினி, நோயெதிர்ப்பு திறனை தருகிறது. ஜீரணத்திற்கு, ஜலதோஷத்திற்கு, விஷமுறிவிற்கு இது மருந்தாக பயன்படுகிறது.

ஏலக்காய்
பச்சை நிறத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய மசாலா பொருள் ஏலக்காய். இது நிறைய மருத்துவ பயன்களை நமக்குத் தருகிறது. முக்கியமாக, வாய்வு, ஜீரணம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், பசியின்மை போன்றவற்றை குணப்படுத்துகிறது. முக்கியமாய் புற்று நோயை எதிர்க்கிறது. குறிப்பாக சரும புற்று நோய் வராமல் தடுக்கிறது.

பெருங்காயம்
பெருங்காயம் மிக முக்கியமான மசாலா பொருள். அது இல்லாமால் சாம்பாரோ பொறியலோ முழுமையடைவது கிடையாது. கட்டிப்பெருங்காயமாகவும், தூளாகவும் பயன்படுத்துகிறோம். இருப்பினும் கட்டிப்பெருங்காயத்தை உபயோகிப்பது அதிக பலனைத் தரும்.இது ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். வாய்வு பிடிப்பில் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பட்டை
இவை இதயத்திற்கு பலம் அளிக்கின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது. லுகீமியா என்ற ரத்தப் புற்று நோயை தடுக்கிறது. அந்த புற்று நோயின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு, புற்று நோய் செல்களை குறைத்து, மேலும் பரவாமல் இருக்க உதவுகிறது.