வித்தியாவை வல்லுறவுக்கு உட்படுத்த கற்பழித்தது யார்? உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்களா? புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களின் மரவனுப்பரிசோதணை அறிக்கை உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஊர்காவற்றை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலை வழக்கு நேற்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் 12 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன் போது மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களின் ஒருவர் மரவணுப்பரிசோதனைக்காக எங்களிடம் இருந்து இரண்டு முறை இரத்த மாதிரிகள் சேகரிக்ககப்பட்டிருந்தன. நீண்ட காலத்தின் பின்னர் அவ்மரவணுப்பிசோதணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவ்வறிக்கை மன்றிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்தால் யார் குற்றவாளிகள் என்பது தெரிந்துவிடும்.
எனவே மரவணுப்பரிசோதணை அறிக்கையின் முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என்று நீதவானிடம் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதவான்:- மரவனுப்பரிசோதணை அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடத்தில், உரிய சந்தர்ப்பங்களின் போது தெரிவிக்கப்படும், அவ்வறிக்கையின் முடிவுகளை இப்போது பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று கூறி சந்தேக நபர்களினால் மன்றில் கோரப்பட்ட விடயத்தினை நீதவான் நிராகரித்தார்.
இதே வேளை வித்தியா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் எனவும் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் வித்தியா கொலை வழக்கில் தொடர்பில்லாதவர்களே தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக கதைகள் உலாவரத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் எனும் கூற்றுக் கூட வித்தியா வழக்கை திசை திருப்புவதற்காக சிலர் திட்டமிட்டு புனை கதைகளை கட்டி விட்டுள்ளதாக கூறும் நீதிமன்றத் தகவல்கள் வித்தியா வழக்கு உயர் நீதி மன்றம் செல்வதால் குழப்பத்தை ஏற்படுத்த சில தனவந்தர்கள் செய்யும் சதி எனக் கூறப்படுகிறது.
காரணம் உயர் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரிக்கப் படுமாக இருந்தால் பல பிரபலங்களின் வாழ்க்கை அசிங்கப்படும் என்பதே பிரதான காணம் எனக் கூறப்படுகிறது.