வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த பெண் யாழ் கசூரினாக் கடற்கரையில் அரை குறை ஆடையுடன் படமெடுத்தவர்கள் பொலிசாரிடம்.

511

வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் அந் நாட்டைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளைக்கார யுவதியும் வந்துள்ளார். இன்று காலை அக் குடும்பத்தினருடன் கசூரினாக் கடற்கரைக்கு வந்த இந்த வெள்ளைக்கார யுவதி செய்த விளையாட்டு அங்கு நின்ற தமிழ் இளைஞா்களுக்கு பெரும் கிளுகிளுப்பை ஊட்டியதாகத் தெரியவருகின்றது.

உள்ளாடையும் அணிந்த கொண்டு கடலில் இறங்கி நீந்தியுள்ளார் இந்த யுவதி. இதன் பின்னா் இந்த யுவதியைச் சுற்றி இளைஞா்கள் குழுவும் அருகில் நின்று ரசித்துள்ளதாகத் தெரியவருகின்றது. சில இளைஞா்கள் யுவதியை தொட்டுப் பார்த்தும் ரகளை செய்ய முற்பட்டும் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கிய போது நிலமை விபரீதமாவதை உணா்ந்த தமிழ்க் குடும்பம் பொலிசாரிடம் முறையிடவே அப் பகுதிக்கு வந்த பொலிசார் இளைஞா்களைத் துரத்தியதாகத் தெரியவருகின்றது.

அத்துடன் குறித்த யுவதியைப் புகைப்படம் எடுத்த இளைஞா்கள் இருவா் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னா் எச்சரிக்கப்பட்டு புகைப்படங்கள் அழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்தவா்கள் தெரிவித்துள்ளனா். யுவதியைக் கூட்டி வந்த தமிழ்க் குடும்பத்திற்கு எங்கள் இடத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என சொல்லத் தெரியாதா என அங்கு குடும்பத்துடன் வந்த சிலா் விசனம் தெரிவித்துள்ளனா்.

SHARE