ஹம்பாந்தோட்டை பொருளாதார திட்டத்துக்காக சீன முதலீட்டாளர்களுடன் பேச்சு

255

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஹம்பாந்தோட்டை பொருளாதார திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 10 பில்லியன் டொலர்களுக்கான முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கை, சீனாவுடன் ஆரம்பித்துள்ளது.

இந்தப் பொருளாதார திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு, மின்வலு உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்கள் என்பன மையப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கண்டி பெரும்பாக அபிவிருத்தி, வடமேல் மாகாண கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டம், மேல்மாகாண மற்றும் தென்மாகாண சுற்றுலா மற்றும் கைத்தொழில் திட்டம் என்பன அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்கீழ் இரண்டு வானூர்தி தளங்களும் இரண்டு துறைமுகங்களும்; அமைக்கப்படுகின்றன.

மேல்மாகாணத்தின் பெரும்பாக அபிவிருத்திக்காக 40 பில்லியன் டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

SHARE