அட்டனில் முச்சக்கரவண்டிகள் திடீர் சோதணை

376

வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் திடீர் சோதணைக்குட்படுத்தப்பட்டது

நுவரெலியா மாவட்ட வாகண பரிசோதகர் மற்றும் அட்டன் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதணையில் 100 மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது

முச்சக்கரண்டிகளினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால்  விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சேவையிலீடுபடமுடியாத குறைபாடுகளுடைய முச்சக்கரண்டிகள் அதிக அலங்காரம் செய்யப்பட்ட  தேவையற்ற உபரணங்கள் பெருத்தப்பட்டவை  பேன்ற முச்சக்கரண்டிகள் சோதணையின் பின்  தற்காளிக சேவையில் இடை நிறுத்பப்படுள்ளது

இனம் காணப்பட்ட குறைபாடுகளை 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் காட்டிய பின் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் சேவையில் ஈடுபட முடியும்  என வாகன பரிசோதகர் எம்.எம்.ஜீ பண்டார தெரிவித்தார்  மேலும் இவ்வாறான திடீர் சோதணைகள் நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்

1de0d941-e621-4b2c-8cc7-7d67153cbac7 3b543a6a-f195-4e98-b6d7-cd4f1256d9af 8c046748-c188-4eb5-b382-937bda3522e9 9fe8a19a-dfc6-483b-b050-5febaef5cc81 28be7274-5e39-4c82-9c07-618b498ed5aa

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

SHARE