தமிழக மீனவர்கள் 77 பேர்தாயகம் திரும்பினர்

244

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்தியது.

குறித்த மீனவர்கள் கடந்த 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 77 பேரும் இன்று சர்வதேச கடல் பகுதியில், இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் கையளிக்கப்பட்டனர்.

இதன் போது மீன்வளத் துறை செயலாளர் பியூலாராஜேஷ், நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி ஆகியோர் மீனவர்களை வரவேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

இந்நிலையில், தாயகம் திரும்பிய மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுவரை இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 102 படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி எங்களை கைது செய்தனர். சிறையில் சரியான உணவு தரப்படவில்லை. கொத்தடிமைபோல் எங்களை நடத்தினர்.

இதுபோன்ற சம்பவத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த மத்திய – மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)

SHARE