அன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றனர்!

272

1469687602_download

பாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு, பாத யாத்திரை செல்வதற்கு அனுமதியளிக்காது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்து, அடக்கியவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றார்கள்.

ஏகாதிபத்திய ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்கள்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாத யாத்திரை செல்வதற்கு மட்டுமன்றி பேசுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் சுடப்பட்டனர்.

எமக்கு கோட்டேயில் கூட்டம் நடத்த இடமளிக்கப்படவில்லை.சிரானி பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா வழக்கு விசாரணைகளை பார்வையிடச் சென்ற எம்மை பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு தாக்கினார்கள்.

இன்று அவ்வாறான சூழ்நிலைகள் கிடையாது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இன்று பாத யாத்திரை செல்ல அனுமதியில்லை என்பது நகைப்பிற்குரியது.

பாத யாத்திரையை தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர் மேம்பாட்டு நிகழ்வு நடைபெறவிருந்த காரணத்தினால் முரண்பாடுகள் மோதல்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது அடக்குமுறையல்ல.

அந்தக் காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை. ரத்துபஸ்வலவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ரொசான் சானக்க என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கண்டியிலிருந்து கொழும்பு மட்டுமன்றி கதிர்காமம் வரையிலும் இன்று பாத யாத்திரை செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE