
இலங்கையுடன் மிக முக்கியமான உறவு காணப்படுவதாக பாகிஸ்தான் பிரதம நீதியரசர் அன்வர் சாஹிர் ஜமாலி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு மற்றும் பிராந்திய அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம், இனங்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் தேசிய ஐக்கியம் ஆகியனவற்றை ஏற்படுத்துவதில் அரசாங்கம் காட்டி வரும் சிரத்தை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.