காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் மேலோட்டமாக திருத்தங்களைச் செய்வதனால் அதன் ஆபத்து நீங்கிவிடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் இணைப்புச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் எழும் எதிர்ப்புக்களை சமாளிக்கும் நோக்கில் மேலோட்டமாக கொண்டு வரப்படும் திருத்தங்களினால் பயனில்லை.
இதனால் இந்த சட்டத்தின் ஆபத்து எந்த வகையிலும் நீங்கப் போவதில்லை. இந்த சட்டத்தின் உள்ளடக்கத்தை நன்கு அவதானித்தால் அதன் ஆபத்தை புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் காரியாலயம் உள்நாட்டு முயற்சியாக கருதப்பட முடியாது, சர்வதேசத்தின் தேவைக்காகவே உருவாக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமையவே உருவாக்கப்படுகின்றது.
சட்டத்தின் 27ம் சரத்தில் நேரடியாகவே வடக்கு கிழக்கு காணாமல் போதல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் 27ம் சரத்தில் நேரடியாகவே வடக்கு கிழக்கு காணாமல் போதல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நபர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டோ அல்லது கொலை செய்யப்பட்டோ இருந்தால் அது பற்றி விசாரணை நடத்துவதனை நாம் எதிர்க்கவில்லை.
அனைத்து மனித உயிர்களுக்கும் ஒரே பெறுமதியே காணப்படுகின்றது.நாட்டின் ஒரு பகுதி மனித உயிருக்கு கூடுதல் பெறுமதி இருக்கின்றது என்ற நிலைப்பாட்டைநாம் ஏற்கவில்லை.
27ம் சரத்தில் வடக்கு கிழக்கில் காணாமல் போதல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் வடக்கு கிழக்கு காணாமல் போதல்கள் பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காரியாலயத்திற்கு வெளிநாட்டு நிதி பெற்றுக்கொள்ளப்படுவதனை நாம் எதிர்க்கின்றோம்.
இந்த சட்டமானது உண்மையைக் கண்டறியும் நோக்கில் உருவாக்க்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.