விஷ ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசாங்கம் சதி முயற்சி!

238

83

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே.

இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை கொண்டுவந்து சோதனை என்ற பெயரில் சில பரிசோதனைகளை நடத்தி விஷ ஊசிகள் போடவில்லை என்று கூறி மூடிமறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒபாமாவுக்கான தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளது .

இதன் முதன் நடவடிக்கையாக இலங்கை அமைச்சர்கள் சிலர் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி பல போராளிகள் கலக்கமடைந்துள்ளதாகவும் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷ மருந்துகளை கண்டறிய ஐக்கிய நாடுகள் ஊடாகவே விசாரணை நடத்த வேண்டி நிற்கின்றார்கள்.

வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை அழைத்து தம்மை காப்பாற்றும் , இலங்கை அரசின் இச் சதி நடவடிக்கையானது சர்வதேச போர்க்குற்ற விசாரணையிலும் பாதிப்பு ஏற்படலாம் என பல தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE