மீமுரேயிலிருந்து வெவெல்தெனிய பிரதேசத்துக்கு வந்த ஜீப் ஒன்றில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பிக்கு கள் மூவருடன் குறித்த ஜீப்பின் சாரதியையும் உடுதும்பர பொலி ஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஜீப்பில் சட்டவிரோதமான முறையில் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றையடுத்து குறித்த மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சொகுசு ஜீப்பில் மரக்குற்றிகளை ஏற்றி அவற்றை மறைக்கும் வித்தில் சில நெல் மூடைகளை ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.