இலங்கையில் பூரண அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீண்டகால போராட்டத்தில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளோம்.
அதிலிருந்து முழுமையாக விடுபட சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளரிடம் கோரியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடக தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று இதனை தெரிவித்துள்ளார்.