தண்ணீருக்காக ஊரே பற்றி எரியும் அவலம்! தீக்கிறையாகிய 50 பஸ்கள்!…தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா?…

273

karnadaka_001-w245

கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது.

மேலும், கர்நாடாக மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் மோதிக்கொள்வதால் இது இந்தியாவின் முக்கிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த பிரச்சனைக்கான முக்கிய காரணங்ள் என்ன? இதற்கு தீர்வு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த ஒரு சிறப்பு பார்வை இதோ,

தண்ணீர் ஓர் எரிபொருள் அல்ல என்கிறது விஞ்ஞானம். ஆனால், இப்போது தண்ணீர் எரிபொருளாய் மாறியிருக்கிறது. ஒரு ஹைட்ரஜன் அணுவும், ஓர் ஆக்சிஜன் அணுவும் பிணையும்போது உருவாவதுதான் நீர் என்கிறது வேதியியல்.

ஆனால், இந்த அணுக்களின் பிணைவு, ஒரு பிளவையே உணடாக்கி இருக்கிறது. காவிரி பிரச்னையில் திங்கள்கிழமை மாலையில் மட்டும் தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன.

கொளுத்தப்பட்ட தனியார் பேருந்துகள்!

பெங்களூருவிலிருந்து 17 கி.மீ தொலைவில், கெங்கேரியில் உள்ள தனியார் பேருந்துகள் பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகள் கன்னட இனவெறியர்களால் கொளுத்தப்பட்டு இருக்கின்றன.

கொளுத்தியவர்கள், ‘‘நாங்கள் எங்கள் ரத்தத்தைக் கொடுப்போம்… ஆனால், காவிரியை அல்ல…’’ என்று கோஷமிட்டுக் கொண்டே கொளுத்தியதாக அந்தப் பகுதியில் இருந்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் திங்கள்கிழமை முழுவதும் கர்நாடக மாநிலத்தில், மாண்டியா, மைசூரு, சித்திரதுர்கா, தர்வாத் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு இருக்கின்றன. அதுபோல, தமிழர்களின் கடைகளும் அதிக அளவில் தாக்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக மாண்டியா பகுதியில்தான் அதிக அளவில் வன்முறை வெடித்து இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டவபுரா பகுதியில் தமிழர்களின் வீடுகளும், கடைகளும் தாக்கப்பட்டு இருக்கின்றன. சாம்ராஜ் நகரிலும் தமிழர்களின் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கின்றன.

‘‘வன்முறை அதிக அளவில் வெடித்துள்ளதால், பெங்களூரு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது’’ என்கிறார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள்.

 

SHARE