கிழக்கு மாகாண சுற்றுலா பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள்

233

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டு களிப்பதற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-15 625-0-560-320-160-600-053-800-668-160-90-16

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தரும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சுற்றுலா பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தில் இந்த சுற்றுலா விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

625-0-560-320-160-600-053-800-668-160-90-17 625-0-560-320-160-600-053-800-668-160-90-18

இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சி.ஐ.ஹெட்டியாராட்சி தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த விசேட சுற்றுலா பொலிஸ் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் இந்த பொலிஸ் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

625-0-560-320-160-600-053-800-668-160-90-19 625-0-560-320-160-600-053-800-668-160-90-20

 

SHARE