இலங்கையின் எதிர்காலம்! ஒரே மேடையில் சங்கமம்! வைரலாகும் காட்சிகள்

208

இலங்கையின் அரசியல் தளத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாத பிரதிவாதங்கள் தலைதூக்கியுள்ளன.

2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார்,? வெற்றி பெறப் போவது யார்? என்ற கேள்வி அரசியல்வாதிகளுக்கு அப்பால் பிராந்திய நாடுகளின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கூடிய வாய்ப்புள்ள மூன்று பேரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டுள்ள வருகின்றன.

அந்த மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

625-0-560-320-160-600-053-800-668-160-90

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய மூவரும் இவ்வாறு ஒரே மேசையில் ஆசனம் பெற்றிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவின் மகளின் திருமண வைபவம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த மூவரும் இவ்வாறு ஒரு மேசையில் ஆசனம் பெற்று அமர்ந்திருந்தமை அரசியலாக மாறியுள்ளது.

திருமண ஜோடிகளுக்காக மிகவும் பெறுதியான வாகனம் ஒன்று அன்பளிப்பாக வழங்க அங்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பலரினால் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.

SHARE