
வடக்கில் கிளர்ச்சி ஏற்படும் என அரசாங்கம் அஞ்சவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வடக்கில் சில தரப்பினர் போராட்டங்களை நடத்திய போதிலும் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றுவதற்கு அரசாங்கம் ஒப்புக் கொள்ள மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக முனைப்பும் கவனமும் செலுத்தி வருவதாகவும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் சகவாழ்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் போராட்டம் போன்ற கடும்போக்குடைய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.