மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் மீன்களை பிடித்து தனக்கு உணவாக்கி கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பது சாதாதரணமானது.
ஆனால், மனிதர்களில் பலர் விலங்குகள் உட்பட உயிரினங்களை நேசிப்பதையும் நாம் காண்கின்றோம்.
மீன்களை பிடித்து சமைத்தும் பொரித்தும் சாப்பிட விரும்புவது மனிதனின் இயல்பு.
ஆனால் , வரட்சியால் வற்றிப் போன குட்டையில் இருந்த மீன்களை இளைஞர்கள் சிலர் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று விட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்துள்ளது.
இலங்கையில் தற்போது பல இடங்களில் வரட்சியான காலநிலை நிலவி வருகிறது.
சில இடங்களில் கடுமையான வரட்சி நிலவாத போதிலும் அம்பாந்தோட்டை , பொலனறுவை தண்ணீர் இல்லாத அளவுக்கு கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது.
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு எவருடைய உதவியாவது கிடைக்கும். ஆனால் அப்பாவி உயிரினங்கள் யாரிடம் உதவி கேட்க முடியும்.
வரட்சியான காலநிலையால் தண்ணீர் வற்றிப் போன குட்டை ஒன்றில் இருந்த மீன்களை சில இளைஞர்கள் பிடித்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று விட்டு ஒரு மனித நேய செயல் ஒன்றை செய்துள்ளனர்.
இளைஞர்களின் இந்த மனிதநேய நடவடிக்கை தொடர்பாக மேலதிக விபரங்கள் வெளியாகாத போதிலும் சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் இளைஞர்களின் செய்த காரியத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.