
ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி புதிய கட்சி அமைக்கப்படாது எனவும் புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிலிமதலாவையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரால் எதிர்வரும் 8ம் திகதி எஹலியகொடவில் நடத்தப்பட உள்ள பேரணி புதிய அரசியல் கட்சி அமைக்கும் நோக்கிலானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். குறித்த திகதியில் புதிய கட்சி அமைக்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.