மஹிந்த ராஜபக்சவின்நெருக்கமானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

218

ivtgg5t

ராஜபக்ச ஆட்சியின் போது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சொத்துக்கள், ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை பெற்றுக் கொண்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனொரு கட்டமாக ‘Entrust Group of Companies’ குழுவுக்கு சொத்தமான 15 கூட்டு நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த Entrust’ என்ற கூட்டு வர்த்தகம் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனராகவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது சகோதரரான சானுக ரத்வத்தேவுக்கு சொந்தமானதொன்றாகும்.

சானுக ரத்வத்தே என்பவர் ‘Entrust’ கூட்டு வர்த்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இசிரி திஸாநாயக்க மற்றும் ஏனைய பணிப்பாளர்களுடன் விளக்கமறியலில் உள்ளார்.

இசிரி திஸாநாயக்க என்பவருக்கு சொந்தமான கண்டி, திகணயில் உள்ள கோல்ப் மைதானத்தில் அடுத்த அமைந்துள்ள 2000 ஏக்கர் காணியும் இவ்வாறு பறிமுதல் செய்யப்படவுள்ள சொத்துக்களுக்கு காணப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றின் வழக்கு இலக்கம் B/290/16 முறைப்பாட்டின் கீழ் நிதி மோசடி விசாரணை பிரிவு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு அமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘Entrust’ கூட்டு வர்த்தகத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1. Entrust Limited

2. Entrust Wealth Management Limited

3. Entrust Health Care Limited

4. Entrust Invesment Limited

5. Western Sports Management (pvt) Limited

6. Entrust Capital Partners

7. Entrust Holdings Limited

8. Multi Finance PLC.

9. The Standared Credit Finance Limited

10. Entrust Capital Market (pvt) Limited

11. Continental Capital (pvt) Limited

12. Maruthi Estate (pvt) Limited

13. Platinum Capital (pvt) Limited

14. Pacific Trust (pvt) Limited ஆகிய நிறுவனங்கள் கூட்டு வர்த்தகத்தில் அடங்கும்.

எனினும் இன்னமும் வெளியாகாத உண்மைகள் மற்றும் மோசடி சொத்துகள் பல உள்ள நிலையில் அவற்றினை பறிமுதல் செய்வதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு வாக்குமூலம் ஊடாக இந்த அனைத்து தகவல்களையும் Boston Capital என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர் ரோஹான் அபய ஈரியாகொல்ல என்பவரினால் வழங்கப்பட்டுள்ளதாக ரத்வத்தே குடும்பத்தினர் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் வெகு விரையில் ராஜபக்ச அரசாங்கம் உருவாக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் ரோஹான் அபய ஈரியாகொல்லவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்வதாக சானுக ரத்வத்தே அனைத்து இடங்களிலும் கூறி வருகின்றார்.

SHARE