லசந்தவின் சடலத்தை படம்பிடிப்பதற்கு பறந்து வந்த கெமரா – மயானத்தில் பரபரப்பு

239

mini-cam1-720x480

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டு நடவடிக்கை தற்போது வரையில் பொரளை மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த சடலம் தோண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பு மாயானத்தில் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் புதைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு மேல் இந்த drone கமெரா சுற்றித் திரிந்தமையினால் பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விமான புகைப்படங்களை எடுத்த இந்த கமெராவை பிடிப்பதற்கு பொலிஸாரினால் முடியவில்லை என தெரியவந்துள்ளது.

மயானத்தை சுற்றியிருந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் நின்ற பகுதிக்கு பொலிஸார் குழப்பத்துடன் ஓடி வந்த போதிலும் குறித்த கமெராவின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE