உலக நாடுகளில் பொருளாதார சமூக அபிவிருத்தியில் புதிய முக்கிய மாற்றங்கள்இடம்பெறுவது புலனாகியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தனியார் துறை ஒத்துழைப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் என கருதப்பட்டவைகளை தற்போது தனியார் துறையினர் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள இந்த மாற்றத்தை உணர்ந்துள்ள அரசாங்கங்கள் காலநிலை பாதுகாப்பு, உட்கட்டமைப்பு தேவைகள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை வளர்ச்சிக்கும், கல்வி தொழில்நுட்ப மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பின்மைக்கும் தீர்வை காண்பதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச தனியார்துறை அமைப்புகளுடன் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளன.
மூன்றாம் உலக நாடுகளில் அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் அதன் அபிவிருத்தி அமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் மூலம் (யுஎஸ்எயிட்) இந்த மாதிரியை தழுவுவதற்கு உதவியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பல அரசாங்க அமைப்புகள் தங்கள் ஜனநாயக பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடையச் செய்வதற்காக அமெரிக்கா அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றது எனவும் அதுல் கேசாப் தெரிவித்துள்ளார்.