தற்போதைய நல்லாட்சியிலும் திருடர்கள் அதிகம் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் பலர் தற்போதைய ஆட்சியில் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால்தான் ஜனாதிபதியின் கால்களில் விழுந்து வணங்கி அரசாங்கத்தை விட்டு வெளியே வரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீன உறுப்பினராக செயற்படுவதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான தான் உள்ளிட்ட அனைவரும் கடந்த கால ஆட்சியில் தவறு இழைத்த அமைச்சர்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோமோ, அதேபோல் தற்போதைய அமைச்சர்கள் தவறு இழைக்கும் போது அது தொடர்பில் பயமில்லாமல் கதைப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்கள் நல்லாட்சிக்காக வாக்களித்துள்ள போதும் அதற்காக செயற்படாவிட்டால அதற்குள் இருந்து கொண்டு அமைச்சின் சலுகைகளை அனுபவிப்பது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.