இலங்கை மக்களின் விருந்தோம்பல், இயற்கை அழகு மற்றும் பல்வகை நிர்மாண பாரம்பரியங்களின் காரணமாகவும் நாட்டின் மதிப்பு கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார்.
காலி, கோட்டை அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் பல்வகைத்தன்மை கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பாதுகாப்பதற்கு நிதி வழங்குவது பெருமை ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பதற்கான பல முக்கிய தளங்களும், முன்னெடுப்பதற்கான பல செயற்றிட்டங்களும் உள்ளன எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் கூறியுள்ளார்.