வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் தாவரவியல் பூங்காக்கள்

236

large_botnical-garden-enterence

இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பூங்காக்களின் மூலம் கிடைக்கும் வருடாந்த வருமானம் 50 கோடி ரூபாவை தாண்டுவதாக தேசிய தாவரவியல் பூங்காக்களின் பணிப்பாளர் நாயகம் கே.என்.யாப்பா தெரிவித்துள்ளார்.

ஹக்கல, பேராதனை, கம்பஹா போன்ற தாவரவியல் பூக்காங்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டவையாகும். இவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்களை தாண்டுகிறது.

உள்நாட்டு நிபுணர்களின் திறமையோடு இதுவரை மேலும் இரண்டு தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை, மிரிச்சவில தேசிய பூங்கா இதில் பிரதான இடம் வகிக்கிறது.

உலர் வலயத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையிலான மரங்களை பாதுகாப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 300 ஏக்கர் விஸ்தீரணமான பூங்காவின் 120 ஏக்கர் விஸ்தீரணமான பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

தங்காலை, கதிர்காமம் வீதியில் பூங்காவுக்கான நுழைவு வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவிசாவளை தாவரவியல் பூங்காவில் ஈர வலயத்திற்கு ஏற்ப காணிகள் காணப்படுகின்றன. இது 165 ஏக்கர் விஸ்தீரணமானதாகும்.

SHARE