முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலையானபோதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
மேலும், ரூபா 50 ஆயிரம் பெறுமதியான ரொக்க பிணையிலும் தலா ஒரு மில்லியன் பெறுமதியான 10 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நெவில் வன்னியாராச்சி மீது சொத்துப்பொறுப்புக்களை வெளியிடாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.