விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என முன்னாள் மேஜர் விமல் விக்கிரமவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்கிரமவிற்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுக்கு இடையே கடும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியளர் சந்திப்பில் தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன, பந்துல குணவர்தனவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
தாம் ஆரம்பித்த செயற்பாட்டை அவரின் நடவடிக்கையென என தெரிவித்து குறித்த நிதியை வழங்குவதற்கு முனைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக வேறு ஒரு தினத்தில் கருத்து தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.