ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
வெஞ்சர் மற்றும் சென்ஜோன்டிலடி பகுதிகளிலே 28.09.2016 காலை 10 மணியளவில் வீதியை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளவுயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணங்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். நோர்வூட் வெஞ்சர் மற்றும் பகுதியில் சென்ஜோன்டிலடி, டிக்கோயா வனராஜா பகுதிகளைச்சேர்ந்த தொழிலாளர்கள் வீதியில் அமர்ந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்குச்சென்ற நோர்வூட் பொலிஸார் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின் போக்குவரத்துத் தடையைச் சீர் செய்தனர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்