அட்டன் கல்வி வலய புனித கபிரியல் கல்லூரிக்கருகிலுள்ள பன்றி வளர்ப்புப் பண்னையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அட்டன் கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
27.09.2016 பாடசாலைக் கட்டிடத்தில் தெள்ளுப்பூச்சி பரவியதையடுத்து மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாடசாலையை 28.09.2016 அன்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பாடசாலையின் தரம் 1 ஏ.பீ, தரம் 2 ஏ.பீ, தரம் 5 ஏ.பீ பிரிவைச்சேர்ந்த 260 மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் 28.29ம் திகதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வகுப்பறைக் கட்டிடத்தில் பரவியிருந்த தௌ;ளுப்பூச்சியை இல்லாதொழிக்க மருந்து அடிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததோடு, கடந்த காலங்களிலும் இவ்வாறு தெள்ளுப்பூச்சி பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்