குற்றங்களைக்காணும் யாரும் சாட்சியளிக்க முன்வருவதில்லை. குற்றங்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாயின் உதவி இன்றியமையாதது – கண்டி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்

232

தற்போதை காலகட்டத்தில் குற்றச்செயல்கள் தொடர்பில் சாட்சிகள் வழங்க யாரும் முன்வருவதில்லை. இவ்வாறான நிலையில் மோப்ப நாயின் பங்களிப்பு இன்றியமையாதது என கண்டி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க தெரிவித்தார். அட்டன் மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு மோப்ப நாய்களைக்கொண்ட தனிப்பிரிவை (யுனிட்) மத்திய மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க அவர்களினால் 26.09.2016 திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரையில் அட்டன் பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க நுவரெலியா, கண்டி பொலிஸ் நிலையங்களில் இருந்தே மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 8 பொலிஸ் நிலையங்களுக்குப் பயன்படும் வகையில் லெபட்ரோ ஜேர்செப்பட்ட இனத்தைச் சேர்ந்த இரண்டு மோப்ப நாய்கள் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மசிரி முனசிங்க, அட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகம சூரிய, அட்டன் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அம்பகமுவ பிரதேச செயலாளர் ஐ.டீ.பீ.சுமனசேன உட்பட பலர் கலந்துகொண்ட நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் மோப்பநாய் சாட்சியளிக்காது, பொய் சொல்லாது, பசி எடுத்தாலும் பசி எனக் கூற முடியாத நாய் தனது கடமையைச் சரியாக செய்யும். அதேபோல நவீன உலகில் குற்றவாளிகளையும், குற்றங்களையும் இனங்கான மோப்ப நாயின் பயன்பாடு நிகர் இல்லாதது. நாட்டில் குற்றச்செயல்கள் 100 க்கு 70 வீதம் நடைபெறுகின்றது. அவற்றில் 60 வீதம் தற்போது தடுக்கப்படுகின்றது. எனினும் நாட்டின் பொலிஸ் மா அதிபரினால் 70 வீதம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறாயின் பொலிஸ் அதிகாரிகளின் சேவை இன்னும் வேகமாக செயற்படவேண்டும் அத்தோடு மோப்ப நாயின் பங்களிப்பும் அத்தியாவசியமாகின்றது. அட்டன் பிரதேசத்தில் இதுவரை காலமும் குற்றங்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய் இல்லாது பல சிரமங்களுக்கு மத்தியிலே கடமையை முன்னெடுக்கவேண்டியிருந்தது. நுவரெலியா-கண்டியிலிருந்தே மோப்ப நாய் கொண்டுவரவேண்டியிருந்து. இனிவரும் காலங்களில் அட்டன் பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்களை இலகுவில் கண்டு பிடிக்கும் வகையில் இரண்டு மோப்ப நாய்கள் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தகவலும் படங்களும்:-

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed

unnamed-1

unnamed-4

unnamed-2

unnamed-3

SHARE