ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை பயன்படுத்தி தொழில் ரீதியாக கொலை செய்யும் கொலைக்காரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு யார் உத்தரவிட்டிருக்க முடியும்?
பாரத லக்ஷ்மன், வசீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க ஆகிய கொலை தொடர்பில் ராஜபக்ச ஆட்சி நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புப்பட்டுள்ளதுடன், அவற்றினை மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர் என ரஞ்சன் ராமநாயக்க இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம் கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதென எவ்வாறு உறுதியான கூற முடியும் என ஊடகவியலாளர் வினவிய போது,
அதனை உறுதி செய்வதற்காக தான் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இன்னமும் விசாரணை ஆரம்பிக்கப்படாத நிலையில் ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதம் கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் எதிர் கேள்விகள் கேட்டுக்கும் போது அந்த இடத்தில் சூடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.