வெலிகடை விபத்தில் ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் பலி

543

201503220448526180_dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_secvpf-720x480

கொழும்பு – ராஜகிரிய வெலிகடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 64 வயதான நபரே உயிரிழந்துள்ளார். இவர் ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் சடலம் தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெலிகடை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE